Tuesday 8 February 2011

சாக்லெட் வாங்க வேண்டும்

கொடைக்கானல்
பசுமைப் பள்ளத்தாக்கை
ரசித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு இளைஞன்
ஓடி வந்து
உள்ளே பாய்ந்துவிட்டான்.

சற்றே அதிர்ந்தது கூட்டம்.
ஆளுக்கொன்று சொல்லிவிட்டு
அரை நிமிடத்தில் கலைந்தார்கள்.

ஒருத்தி சொன்னாள்...
சாவு வரும் நேரத்தை யாரறிவார்?

நான் சொன்னேன்...
சீக்கிரம் வா
சாக்லெட் வாங்க வேண்டும்.

Wednesday 2 February 2011

வார்த்தைகள்

வந்து
விழுந்து கொண்டேயிருந்தன
வார்த்தைகள்.

தலை கவிழ்ந்து
அமர்ந்திருந்தேன்
நான்.

அலை போன திசையெல்லாம்
அலைப்புண்டு
கரை சேர்ந்தபின்
மீதமிருந்த
வெறுமையை நிரப்பின
வார்த்தைகள்.